உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு கல்லுாரியில் சேர்க்கை; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

அரசு கல்லுாரியில் சேர்க்கை; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

கூடலுார்; கூடலுார் அரசு கல்லுாரியில் இன்று மாணவர் சேர்க்கை நடக்கிறது,கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கல்வி ஆண்டுக்கான இளங்கலை மாணவர்களுக்கான, 'வராண்டா' மாணவர் சேர்க்கை, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. கல்லுாரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளும் இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து கல்லுாரிக்கு வரவேண்டும்.சேர்க்கைக்கு வரும் மாணவர், பாஸ்போர்ட் அளவிலான, 5 புகைப்படங்கள், அனைத்து பள்ளி சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் தலா, 5 காப்பி, வங்கி சேமிப்பு கணக்கு புக், ஆதார் கார்ட், வருமான சான்றிதழை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை