வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்களிடம் பணம் இருந்தால்தானே வாங்குவார்கள்? வசதி இருக்கறவன் மேலும் வசதியாகி ஸ்விக்கி, சொமாட்டொவில் சாப்புடறான். கீழ்த்தட்டு மக்கள் வாங்கலேன்னா பொருளாதாரம் deflation ஆயிக்கிட்டி ருக்குன்னு அர்த்தம்.
கோத்திகிரி; கோத்தகிரி பகுதியில் கேரட்டிற்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் சாலையோரத்தில் கொட்டி அழித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக, நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில், மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. நடுப்பாண்டு, கோத்தகிரி கூக்கல்தொரை சுற்றுப்புற பகுதிகளில் கேரட் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது. கேரட் சாகுபடி மேற்கொள்ள அதிக முதலீடு தேவை. இதனால், அறுவடை செய்த கேரட், ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம், 60 ரூபாய் முதல் அதிகபட்சம், 100 ரூபாய் விற்பனை செய்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு, இழப்பு இல்லாமல் ஓரளவு லாபம் கிடைக்கும். இந்நிலையில், நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ கேரட், 5 ரூபாய்க்கு மட்டுமே விலை கிடைக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால், தயாரான கேரட்டை அறுவடை செய்து, ஆற்றிலும், சாலையோரத்திலும் கொட்டி வருகின்றனர். மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில், ''நீலகிரி மாவட்ட விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கேரட் பயிரிட்டுள்ளனர்.தோட்டத்திற்கு செலவிட்ட முதலீடு கூட கிடைக்காத வகையில், ஒரு கிலோ கேரட் மேட்டுப்பாளையம் மண்டிகளில், 5 ரூபாய்க்கு விற்கப்படுவதால், பொருளாதார இழப்பு விவசாயிகளுக்கு அதிகரித்துள்ளது.இதனால், அறுவடை செய்த கேரட், நீரோடைகளிலும், பொது இடங்களிலும் கொட்டப்படுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அரசு உரிய பயிர் நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.
மக்களிடம் பணம் இருந்தால்தானே வாங்குவார்கள்? வசதி இருக்கறவன் மேலும் வசதியாகி ஸ்விக்கி, சொமாட்டொவில் சாப்புடறான். கீழ்த்தட்டு மக்கள் வாங்கலேன்னா பொருளாதாரம் deflation ஆயிக்கிட்டி ருக்குன்னு அர்த்தம்.