உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் மீதான புகார்; கலெக்டருக்கு ஐகோர்ட் கெடு

நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் மீதான புகார்; கலெக்டருக்கு ஐகோர்ட் கெடு

நீலகிரி நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள், 12 பேருக்கு எதிராக, நகராட்சி தலைவர் அளித்த புகாரை பரிசீலித்து, ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை, மாவட்ட கலெக்டர் பிறப்பிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி தாக்கல் செய்த மனு: உள்ளூர் பிரச்னைகளை கண்டறிந்து, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, ஒவ்வொரு கவுன்சிலரின் கடமை. ஆனால், அந்த கடமையை, நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் புறக்கணித்துள்ளனர். அதாவது, கடந்த மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை. ஒரு பெண் கவுன்சிலர் அனுமதி பெறாமல், வெளிநாடு சென்றுள்ளார். கடமையை புறக் கணித்த, 12 கவுன்சிலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த மாதம் கலெக்டருக்கு அளித்த புகாரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.மாலா, ''மனுதாரர் அளித்த புகாரை பரிசீலித்து, ஆறு வாரங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை, நீலகிரி மாவட்ட கலெக்டர் பிறப்பிக்க வேண்டும். மனுதாரரின் குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதினால், 12 கவுன்சிலர்களும் விளக்கமளிக்க அவகாசம் வழங்கிய பிறகே, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ