மாரியம்மன் கோவில் மண்டல பூஜை பக்தர்கள் சுவாமி தரிசனம்
கோத்தகிரி,; கோத்தகிரி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், 34ம் நாள் மண்டல பூஜையில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், நவ., 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது.நாள்தோறும், கோத்தகிரி பகுதியில் வசிக்கும் பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் தனியார் சார்பில், அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார பூஜை நடந்து வருகிறது. ஆன்மிக சொற்பொழிவு பஜனை இடம்பெறுகிறது. அதன்படி, 34வது நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. மார்கழி மாதம் அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு அலங்கார மலர் வழிபாடு சிறப்பு பூஜை நடந்தது.பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள, பல்வேறு பகுதியில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.