உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பேக்கரியில் வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்

 பேக்கரியில் வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்

கூடலுார்: கூடலுார் குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாசியர் நடேசன் மற்றும் ஊழியர்கள் , மாலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஒர பேக்கரியில் வணிகரீதியாக பயன்படுத்தியல், 2 வீட்டு உபயோக சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வருவாய் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனி வட்டாசியர் நடேசன் கூறுகையில், ''வீட்டு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும், சிலிண்டர்களை வணிகரீதியாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி, பயன்படுத்தினால், சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி