உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விதை பரிசோதனையை விவசாயிகள் கட்டாயமாக்கணும்; வேளாண் துறை அறிவுரை

விதை பரிசோதனையை விவசாயிகள் கட்டாயமாக்கணும்; வேளாண் துறை அறிவுரை

ஊட்டி; 'நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை வினியோகஸ்தர்கள் இருப்பு வைத்துள்ள விதைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி; 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. தோட்டக்கலை துறை சார்பில், மலை காய்கறி விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 'வேளாண்மை விதை பரிசோதனை நிலையமும் விதைப்பு பணிக்கு முன்பாக பிரதான காய்கறிகளை கட்டாயம் விதை பரிசோதனைக்கு உட்படுத்திய பின் தான் விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தி வருகிறது.வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் விதைகளின் பங்கு இன்றியமையாதது. விதைகள் நல்ல தரத்துடன் இருப்பது அவசியம். விதைகள் நல்ல தரத்துடன் இருந்தால் மட்டுமே, பயிர்கள் மற்ற அனைத்து இடுபொருட்களையும் ஏற்று கொண்டு நல்ல முறையில் வளர்ந்து அதிகரித்த விளைச்சலை அளிக்கும். விதைகளை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்பு பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'விவசாயிகள் விதை பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும். அதில், பிரதான காய்கறிகளான கேரட், காலிப்பிளவர் முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், பட்டாணி, பாலக்கீரை, நுால்கோல் உட்பட காய்கறிகளுக்கு ஏற்ப, விதை மாதிரியை, விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து கட்டாயம் விதை பரிசோதனை செய்த பின் தான் விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை