தேனீ கொட்டியதில் ஐந்து பேர் காயம்
பந்தலுார்: கேரளா வயநாடு பகுதியில் தேனீக்கள் கொட்டியதில், 5 பேர் காயம் அடைந்தனர். கேரளா மாநிலம் வயநாடு மீனங்காடி பூதானம் என்ற இடத்தில், தேனீ கூடு இருந்துள்ளது. நேற்று மதியம் இந்த பகுதியில் நின்றிருந்த ஜோசப்,72, சத்தியதாசன், 80, மனோஜ்,50, ரவி,65, ரவியின் மனைவி தேவகி,59, ஆகியோரை, தேனீக்கள் கொட்டின. காயம் அடைந்த ஐந்து பேரும் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்படுகிறது.