உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அறிவழகன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், தடை செய்யப்பட்ட புகையிலை; போதை பொருட்கள் குறித்து சோதனையிடப்பட்டது.மேலும், கடைகளில் பிளாஸ்டிக் விற்பனைக்கு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில்,'மாணவர்கள் கடைகளுக்கு வந்து புகையிலை, பீடி, சிகரெட் போன்ற பொருட்களை கேட்டால், விற்பனை செய்ய கூடாது; தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் விற்பனை செய்ய கூடாது. இவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்து புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ