உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இளித்தொரை கிராமத்தில் நுாலகம் திறப்பு விழா

இளித்தொரை கிராமத்தில் நுாலகம் திறப்பு விழா

குன்னுார்; குன்னுார், இளித்தொரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நுாலகம் திறப்பு விழா நடந்தது. குன்னுார் எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், எடப்பள்ளி அருகே இளித்தொரை கிராமத்தில் புதிதாக நுாலகம் கட்டப்பட்டது. நுாலகத்தை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கூடுதல் கலெக்டர் சங்கீதா, மாவட்ட நுாலக அலுவலர் (பொ) கிளமென்ட், கிளை நுாலகர் மலர் வண்ணன், ஊர் தலைவர் சேகர், வாசகர் வட்ட தலைவர் சங்கரன், வாசகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை