மேலும் செய்திகள்
மண்டல அபிஷேகம் நிறைவு அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
08-Jan-2025
குன்னுார்; குன்னுார் இந்திரா நகர் நாகம்மன் கோவிலில் நடந்த பொங்கல் திருவிழாவில் அம்மன் தேர் ஊர்வலம் நடந்தது. குன்னுார் காந்திபுரம் அருகே இந்திரா நகர், நாகம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், அம்மன் நாக வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க அம்மன் திருவீதி உலா நாகம்மன் கோவிலை அடைந்தது. கேரள கலை குழுவினரின் காவடியாட்டம் உள்ளிட்டவை இடம் பெற்றன. பக்தர்கள் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வந்தனர்.
08-Jan-2025