என்.சி.சி., மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம்
குன்னுார் : கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லுாரி என்.சி.சி., சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, 12 கி.மீ., நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.கல்லுாரியில் துவங்கிய நடைபயணம் வேலிவியூ பாயின்ட் வரை நடந்தது. இயக்குனர் டாக்டர் அருமைராஜ் இதனை துவக்கி வைத்தார். என்.சி.சி., அதிகாரி லெப்., மனோஜ் பிரபாகர் தலைமையில், 40 என்.சி.சி., மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.