மேலும் செய்திகள்
கேரளாவில் பறவை காய்ச்சல்: வாகனங்களுக்கு கிருமி நாசினி
8 minutes ago
பேட்டரி காருக்கு கவுண்டரில் டிக்கெட் வழங்க கோரிக்கை
8 minutes ago
அரசு நிலத்தில் மண் திருட்டு ஆய்வு செய்ய வலியுறுத்தல்
8 minutes ago
பந்தலுார்: பந்தலுார் அருகே நெலாக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில், ஆண் யானை ஒன்று தனியாக உலா வருகிறது. பகல் நேரங்களில் புதர்களில் படுத்து ஓய்வெடுக்கும் இந்த யானை, இரவு ஏழு மணிக்கு மேல் குடியிருப்பு பகுதியில் மற்றும் சாலைகளில் உலா வருவது வழக்கமாக கொண்டு உள்ளது. இந்நிலையில், நேற்று காலை, நெலாக்கோட்டை பஜார் சாலையில் யானை நடந்து வந்தது. அப்போது எதிரே அரசு பஸ் வந்த நிலையில், யானையை பார்த்த டிரைவர் பஸ்சை நிறுத்தி உள்ளார். பஸ்சை நோட்டமிட்ட யானை, பக்கவாட்டு கண்ணாடியை லேசாக தள்ளிவிட்டு, பஸ்சின் ஓரப்பகுதியில் நடந்து சென்றது. அப்போது நின்று பஸ்சுக்குள் இருந்த பயணிகளை நோட்டமிட்டது. அனைவரும் அச்சமடைந்தனர். சிறிது நேரம் நின்று வனப்பகுதிக்குள் சென்றது.
8 minutes ago
8 minutes ago
8 minutes ago