உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போக்சோ சட்டம்: மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

போக்சோ சட்டம்: மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

கூடலுார்; கூடலுார் தேவர்சோலை, அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு முகாமில், போக்சோ சட்டம் குறித்து தேவர்சோலை போலீசார் விளக்கினர்.கூடலுார் தேவர்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவர்சோலை போலீஸ் சார்பில், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி குமாரி தலைமை வகித்தார்.தேவர்சோலை எஸ்.ஐ., வனக்குமார், 'போக்சோ சட்டம், மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைப்பது, மாணவர்களின் உடல் நலம் பாதுகாப்பு,' குறித்து விளக்கினார். முகாமில், தேவர் சோலை பேரூராட்சி துணைத் தலைவர் முனீஸ் பாபு, கவுன்சிலர் நாசர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை