விலை உயர்வு 55 காசு தான்! தேயிலை விவசாயிகள் வாட்டம்
குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை மையம் மற்றும் இன்கோசர்வ் மையத்தில், ஏலம் விடப்படும், தேயிலை தூள், விலையின் அடிப்படையில், மாதந்தோறும், பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் அந்தந்த கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் செய்யப்படுகிறது. இதன்படி, நீலகிரியில் சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த தேயிலை தூள், அந்தந்த மாதம் நடக்கும் ஏலங்களின் அடிப்படையில், அதே மாதத்திற்கான பசுந்தேயிலை விலையை குன்னூரில் உள்ள தேயிலை வாரியம், நிர்ணயம் செய்து வருகிறது. இதன்படி, தேயிலை 30 ஏ 5 (ஏ) பிரிவின், மார்க்கெட் கட்டுப்பாடு 2வது திருத்தம் அடிப்படையில், அக்., மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோ, 15.60 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இந்த விலையை, அனைத்து தொழிற்சாலைகளும் கடைபிடிக்க வேண்டும்; இதை தென்னிந்தி ய தேயிலை வாரிய அனைத்து கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை மேம்பாட்டு உதவி இயக்குனர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர், என தேயிலை வாரிய செயல் இயக்குனர் பரணிகுமார் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தை விட, இந்த மாதம் பசுந்தேயிலை கிலோவிற்கு 55 பைசா மட்டுமே அதிகரித்துள்ளது.