உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரண்டாம் கட்ட இடிப்பு பணி 38 கடைகளுக்கு நோட்டீஸ்

இரண்டாம் கட்ட இடிப்பு பணி 38 கடைகளுக்கு நோட்டீஸ்

ஊட்டி : ஊட்டியில், இரண்டாம் கட்ட பணிக்காக பழைய கடைகளை இடிக்க, 38 கடைகளுக்கு 'நோட்டீஸ்' வினியோகிக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடந்த, 80 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது, 1,500 கடைகள் இருந்தன. பழைய கடைகளை இடித்து, புதிய கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக, 190 கடைகள் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட பகுதியில் புதிய கடைகளுக்கான கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. கடை வியாபாரிகளுக்காக ஏ.டி.சி., பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டது.

38 கடைகளுக்கு நோட்டீஸ்

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக பழைய கடைகளை இடிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 'கடைகளை காலி செய்து தருமாறு', நகராட்சி நிர்வாகம் சார்பில், 38 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கடைகளை காலி செய்யும் வியாபாரிகளுக்காக ஏ.டி.சி., பகுதியில் கூடுதலாக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளில் வியாபாரம் செய்ய கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,''நகராட்சி மார்க்கெட்டில் புதிய கடைகளுக்கான முதற்கட்ட கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட பணியை ஒட்டி, கடைகளை காலி செய்து தருமாறு, 38 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அங்கு விரைவில் பழைய கடைகள் இடிக்கப்பட்டு பணிகள் துவக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி