ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா மறுபூஜையுடன் நிறைவு
கோத்தகிரி, ;கோத்தகிரி ஹேப்பிவேலி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று மறு பூஜையுடன் நிறைவடைந்தது.கடந்த, 23ம் தேதி கணபதி ஹோமம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, 12:00 மணிக்கு உச்சகால பூஜையை அடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, அருள்மிகு அம்மன் அழைப்பு நடந்தது.24ம் தேதி, கடைவீதி ஸ்ரீ விநாயகர் கோவிலில் இருந்து அமைப்பினரின் பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5:30 மணிக்கு, அம்மனின் திருத்தேர் வீதி உலாவும், இரவு, 8:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் (25ம் தேதி) காலை, 8:00 மணிக்கு, மஞ்சள் நீராடல் நடந்தது. நேற்று, பகல், 12:00 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைந்தது.