உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதுமலை மாயாறு ஆற்றின் குறுக்கே புதிய பாலம் டிச., மாதம் பயன்பாட்டுக்கு வரும்

முதுமலை மாயாறு ஆற்றின் குறுக்கே புதிய பாலம் டிச., மாதம் பயன்பாட்டுக்கு வரும்

கூடலுார் : 'தெப்பக்காடு மசினகுடி சாலையில், மாயாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் புதிய பாலம், டிச., மாதம் பயன்பாட்டுக்கு வரும்,' என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு அருகே, மசினகுடி சாலையில் மாயார் ஆற்றின் குறுக்கே, சேதமடைந்த பழைய பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்டும் பணி, 2022 ஜன., மாதம் துவங்கப்பட்டது. பழைய பாலம் இடிக்கப்பட்டும் சில காரணங்களால் புதிய பாலம் கட்டும் பணிகள் ஓராண்டுக்கு மேலாக துவங்கப்படவில்லை. இதனால், உள்ளூர் ஓட்டுனர்கள், மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, நீலகிரி எம்.பி., ராஜா பாலத்தை ஆய்வு செய்தனர். 'புதிய பாலம், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும்,' என, தெரிவித்தனர். தொடர்ந்து பாலத்திற்கான பில்லர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. ஆனால், பணிகள் 'ஆமை' வேகத்தில் நடந்தது. நடப்பாண்டு, மூன்று பில்லர்கள் அமைக்கப்பட்டு, ஒரு பகுதியில் பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, பருவமழை தீவிரமடைந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், மசினகுடி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்துக்கு, வனத்துறைக்கு சொந்தமான தற்காலிக பலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, பாலத்தில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து உள்ளது. இருபுறமும் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில்,'பாலம் பணிகள் முடிந்து டிச., மாதம் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்,' என்றனர்.உள்ளூர் மக்கள் கூறுகையில், 'மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாலம் பணி நிறைவடைந்து, டிச., மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்ற அறிவிப்பால் ஓட்டுனர்கள்; கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை