உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஏலங்களில் ரூ.25.78 கோடி மொத்த வருமானம்; தேயிலை விற்பனையில் தொடரும் வீழ்ச்சி

ஏலங்களில் ரூ.25.78 கோடி மொத்த வருமானம்; தேயிலை விற்பனையில் தொடரும் வீழ்ச்சி

குன்னுார்; குன்னுாரில் நடந்த தேயிலை ஏலங்களில், 25.78 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள் குன்னுார் ஏல மையம் மற்றும் டீசர்வ் ஏல மையங்களில் ஏலம் விடப்படுகிறது. நடப்பாண்டில் முதன் முறையாக கடந்த அக்., மாதம் விலை 'கிடுகிடு' வென உயர்ந்தது.

தொடரும் வீழ்ச்சி

இந்நிலையில், குன்னுார் ஏல மையத்தில் நடந்த, 49வது ஏலத்தில், 23.21 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்ததில், 19.64 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த ஏலத்தை விட, 2.78 லட்சம் கிலோ வரத்து குறைந்து; விற்பனையில், 20 ஆயிரம் கிலோ குறைந்தது; 84.57 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 124.05 ரூபாய் என இருந்தது. மொத்த வருமானம், 24.36 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த வாரத்தை விட,40 லட்சம் ரூபாய் குறைவாக இருந்தது. இதேபோல, நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் 'டீசர்வ்' மையத்தில் ஏலம் விடப்படுகிறது. இங்கு நடந்த, 49வது ஏலத்தில், '1.33 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 1.30 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை, 109.72 என இருந்தது. 1.42 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலையில் கிலோவிற்கு, 4.94 குறைந்தது.கடந்த வாரத்தை விட, 9,000 கிலோ வரத்தும், 3,000 கிலோ விற்பனையும் குறைந்தது; கடந்த ஏலத்தை விட, 17 லட்சம் ரூபாய் மொத்த வருமானம் சரிந்தது. இரு ஏலங்களிலும் சேர்த்து, 25.78 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. ஒரே வாரத்தில், 57 லட்சம் ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி