குன்னுாரில் வீணாகும் குடிநீர்
குன்னுார்: குன்னுார் ரேலி காம்பவுண்ட் சமுதாய கூடம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, நீலகிரி மக்கள் நற்பணி மய்யம் செயலாளர் வினோத் குமார் கூறுகையில்,''ரேலி காம்பவுண்ட் பகுதியில்,15 நாட்களாகியும் குடிநீர் வரவில்லை. குழாய் உடைந்து அடிக்கடி குடிநீர் வீணாகி வருகிறது. சீரமைத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்,'' என்றார்.