உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை கட்டிலின் கீழ் பதுங்கிய பெண்கள்

வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை கட்டிலின் கீழ் பதுங்கிய பெண்கள்

-பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் உலா வரும், 'புல்லட்' என்ற காட்டு யானை இரவு, 7:00 மணிக்கு மேல் கிராமங்களில் புகுந்து வீடுகளை இடித்தும், கதவுகளை உடைத்தும் உள்ளே செல்கிறது. அங்கு, அரிசி மற்றும் உணவு பொருட்களை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு படைச்சேரி என்ற இடத்தில் ஜானகி, 84, என்பவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற யானை, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த அரிசி உட்பட உணவு பொருட்களை எடுத்து ருசித்துள்ளது.ஒரு மணி நேரம் வீட்டிற்குள் யானை நின்றிருந்த நிலையில், அருகில் இருந்த அறையில், ஜானகியும், பேத்தி ரேஷ்மாவும், பீதியுடன் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்தனர். வனத்துறையினர் சப்தம் எழுப்பி, யானையை விரட்டினர். அங்கிருந்து சென்ற யானை அருகில் இருந்த விவசாய தோட்டத்தில், 40 பாக்கு மரங்கள், அப்பகுதியில் இருந்த ராமசாமி மற்றும் மணவாளன் ஆகியோரின் வீடுகளை சேதப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை