மேலும் செய்திகள்
சொத்துக்காக தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
03-Mar-2025
ஊட்டி: ஊட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்,25. கூலி தொழிலாளியான இவர், 2021ம் ஆண்டு, ஊட்டியை சேர்ந்த ஒரு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மீது, ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னீர் செல்வம் ஜாமினில் வெளியே வந்தார். இவர் காதலித்து வந்த சிறுமி, 18 வயதை தாண்டி விட்டதால் வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனை அறிந்த அவர், கடந்த, 7ம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தினர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
03-Mar-2025