உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / தேய்ந்த டயர்களால் ஓயாது ஓடும் ஆபத்தான ஆம்புலன்ஸ் வேன்கள்

தேய்ந்த டயர்களால் ஓயாது ஓடும் ஆபத்தான ஆம்புலன்ஸ் வேன்கள்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களின் உயிர் காக்க அவசர தேவைகளுக்காக, 108 ஆம்புலன்ஸ்கள் மாவட்டத்தில், 39 இடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை மக்களுக்கான பேருதவியாக இருந்து வருகிறது.இந்த சேவையின் பராமரிப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து அதற்கான தொகையை அரசு வழங்கி வருகிறது. ஆனால், சேவை நிறுவனம் 108 ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் சரியாக வழங்குவதில்லை. அதே போல 108 ஆம்புலன்ஸ்களை சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருந்தாலும். அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கவனத்தில் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் சில 108 ஆம்புலன்ஸ்களில் டயர்கள் தேய்ந்து சேதமடைந்து உள்ளதாகவும், அந்த டயர்களை வைத்தே அவசர உதவிக்கு இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.'சேதமடைந்த டயர்களை மாற்றிக் கொடுங்கள்' என்று 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கேட்டால், சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆனால், டயர் பஞ்சரானால் ஆம்புலன்ஸ் டிரைவர் பொறுப்பேற்று கடிதம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள டயர்களை மாற்றி நல்ல நிலையில் டயர்களை கொண்டு 108 ஆம்புலன்ஸ்களை இயக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து, 108 ஊழியர்கள் கூறியதாவது:பணி நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் கண்டு கொள்வதில்லை.பல வாகனங்களில் டயர்கள் கிழிந்திருந்தாலும் குறிப்பிட்ட கிலோ மீட்டரில் மாற்றாமல் அதையே பயன்படுத்தச் சொல்கின்றனர். இதனால், விபத்துகள் தான் ஏற்படுகின்றன. அவசரத்திற்கு செல்ல முடியவில்லை. இரண்டு அமைச்சர்கள் உள்ள மாவட்டத்திலேயே இந்த நிலையில் தான் 108 வாகனங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி