உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / பள்ளி வேன் கவிழ்ந்து 25 மாணவர்கள் காயம்

பள்ளி வேன் கவிழ்ந்து 25 மாணவர்கள் காயம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை அருகே காட்டுநாவல்பட்டி பகுதியில் அருள்மாரி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை, தனியார் வேன் ஒன்று மாணவ - மாணவியரை அந்த பள்ளிக்கு ஏற்றிச் சென்றது.கந்தர்வகோட்டை அருகே அம்மாபுதுப்பட்டி பகுதியில் சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், நிலை தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த, 25 மாணவர்கள் காயமடைந்தனர். அங்கிருந்தோர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கந்தர்வகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை