உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீஸ் ஸ்டேஷனில் கைதி இறந்த வழக்கு செப்.,12க்கு தள்ளிவைப்பு

போலீஸ் ஸ்டேஷனில் கைதி இறந்த வழக்கு செப்.,12க்கு தள்ளிவைப்பு

ராமநாதபுரம்:பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கைதி உயிரிழந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் செப்.,12க்கு தள்ளி வைத்தது. மதுரை ராமானுஜன் மகன் வெங்கடேசன் 26. இவரை திருட்டு வழக்கு தொடர்பாக 2012 அக்.,2-ல் பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அப்போது போலீசார் தாக்கியதில் ஸ்டேஷனில் வெங்கடேசன் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இவ்வழக்கில் அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஓய்வு பெற்ற எஸ்.ஐ., முனியசாமி இறந்துவிட்டார். ஏட்டுக்கள் பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல், ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர். அதன்பிறகு வழக்கு நீதித்துறை நடுவர் மன்றத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நேற்றைய விசாரணைக்கு கோதண்டம், ஞானசேகரன், கிருஷ்ணவேல் ஆஜராகினர். வழக்கு விசாரணையை செப்., 12க்கு நீதிபதி குமரகுரு தள்ளி வைத்தார்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை