உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்

ராமேஸ்வரம்:-சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.நேற்று சித்திரை அமாவாசையில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடல், கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். பின் கோயிலுக்குள் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.நேற்று கோயில் நான்கு ரத வீதி, திட்டக்குடி தெரு, அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை