ஊருணியில் மூழ்கி மூதாட்டி பலி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மனைவி வேலம்மாள் 75. இவரை நேற்று முன் தினம் இரவு முதல் காணவில்லை. உறவினர்கள் தேடி வந்த நிலையில் மகர்நோன்பு பொட்டல் ஊருணியில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. பஜார் போலீசார் அவரது உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.