உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி பூஜை

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சிநேகவல்லி அம்மன், திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனுக்கு நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.கடலாடி: கடலாடி அருகே சமத்துவபுரம் செல்லும் வழியில் வனப்பேச்சி அம்மன், ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது.இங்கு பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் வனப்பேச்சி அம்மன், ராக்காச்சி அம்மன் உள்ளிட்ட பூர்ண புஷ்பகலா சமேத கொண்டன அய்யனார், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, சோனை கருப்பண்ணசாமி, பைரவர், வீரபத்திரர் மாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ