உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / யானை வாகனத்தில் விநாயகர் ஊர்வலம்

யானை வாகனத்தில் விநாயகர் ஊர்வலம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் மாலையில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. ஐந்தாம் நாளான நேற்று மாலை யானை வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்தார்.முன்னதாக அலங்காரம் செய்யப்பட்ட மூலவர் மற்றும் உற்ஸவருக்கு நடந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.செப்.5ல் சித்தி, புத்தி இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம், மறுநாள் தேரோட்டம் நடக்கிறது. செப்.7 ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை