கச்சத்தீவு திருவிழா செல்லும் படகுகளில் இன்று ஆய்வு
ராமநாதபுரம்:' -கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் விசைப்படகு, நாட்டுப்படகுககளை மீன் வளத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 11) ஆய்வு செய்கின்றனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 14, 15ல் நடக்கிறது. விழாவிற்கு தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம்.இந்த ஆண்டு 82 விசைப்படகுகள், 23 நாட்டுப்படகுகளில் பயணிகள் செல்ல உள்ளனர்.இந்த படகுகளை ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் மீன் வளத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்யவுள்ளனர். ஆய்வில் படகுக்கான ஆவணங்கள், படகு கடலில் பயணிக்க தகுதியுள்ளதா, படகில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் நல்ல நிலையில் இயங்குகிறதா, படகுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா போன்ற விபரங்களை ஆய்வு செய்து தகுதி சான்று வழங்குவார்கள்.அதன் பிறகே கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகள் செல்ல அனுமதிக்கப்படும். ஒரு விசைப்படகில் 40 பேர் வீதமும், ஒரு நாட்டுப்படகில் 18 பேர் வீதமும் மார்ச் 14ல் கச்சத்தீவு திருவிழாவிற்கு பயணிக்கவுள்ளனர்.