உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செப்.11 வரை பாம்பன் மீனவர்களுக்கு சிறை

செப்.11 வரை பாம்பன் மீனவர்களுக்கு சிறை

ராமேஸ்வரம்,:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேருக்கு செப்., 11 வரை சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆக.8ல் பாம்பன், தங்கச்சிமடத்தில் இருந்து 4 நாட்டுப்படகுகளில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர். மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் மீனவர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.இந்நிலையில் வாய்தா நாளான நேற்று புத்தளம் நீதிமன்றத்தில் 35 மீனவர்களை இலங்கை போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் செப்.,11 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து 25 நாட்களாக சிறையில் வாடிய மீனவர்களின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்ட தகவலால் பாம்பன் மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை