உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை கோர்ட்டில் மார்ச் 8ல் லோக் அதாலத்

திருவாடானை கோர்ட்டில் மார்ச் 8ல் லோக் அதாலத்

திருவாடானை : திருவாடானை நீதிமன்றத்தில் மார்ச் 8ல் லோக் அதாலத் நடக்கிறது. இதில் பங்கேற்று பயன்பெற அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாடானை நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மார்ச் 8 ல் லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இது குறித்து வட்ட சட்டப் பணி குழு அலுவலர்கள் கூறியதாவது:இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளும் விதமான சமரசம் ஏற்படுத்தக் கூடிய சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு, சிறு குற்றங்கள், செக் மோசடி, வங்கி வாராக் கடன், நிலமோசடி வழக்குகள் குறித்து விசாரித்து தீர்வு காணப்படும். நீண்ட நாள் நிலுவையில் உள்ள இது போன்ற வழக்குகள் மற்றும் இரு தரப்பும் சமரசத்துக்கு தயாராக உள்ள வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். வழக்குதாரர்கள் சட்டப்பணிகள் குழுவை அணுகி பயன்பெறலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ