தாய் இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் தாய் இறந்த சோகத்துடன் பிளஸ் 2 மாணவி பிரியதர்ஷினி கணிதத் தேர்வு எழுதினார்.ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் தெருவைசேர்ந்த முருகேசன், அமுதா தம்பதியினர் மகள் பிரியதர்ஷினி. உடல்நிலைசரியில்லாமல் இருந்த மாணவியின் தாய் அமுதா நேற்று அதிகாலை இறந்து விட்டார்.தாய் இறந்த போதும் பிரியதர்ஷினி நேற்று பிளஸ் 2 கணித தேர்வை எழுதினார்.