உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உதவித்தொகை தேர்வு எழுதிய மாணவர்கள்

உதவித்தொகை தேர்வு எழுதிய மாணவர்கள்

திருவாடானை : திருவாடானை வட்டாரத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 512 மாணவர்கள் உதவித் தொகை பெற தேர்வு எழுதினர். மத்திய அரசின் வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை திட்டத்தில் (என்.எம்.எஸ்.எஸ்.,) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வித் உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு நேற்று நடந்தது. திருவாடானை அரசு ஆண்கள், பெண்கள், தொண்டி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த இத்தேர்வில் எட்டாம் வகுப்பு படிக்கும் 512 மாணவர்கள் தேர்வு எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி