இலங்கை படகுடன் மீனவர்கள் மூவர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இலங்கை பைபர் படகை மடக்கிய இந்திய கடலோர காவல் படையினர் இலங்கையை சேர்ந்த மூன்று மீனவர்களை கைது செய்தனர்.தொண்டி கடற்பகுதியில் கடலோர காவல் படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைபர் படகு நின்று கொண்டிருந்தது. படகை மடக்கி அதில் இருந்த இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.காற்றின் வேகம் காரணமாக படகு திசை மாறி இந்திய கடற்பரப்புக்குள் வந்ததாக தெரிவித்தனர். இவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு கொண்டு வந்தனர்.அங்கு முழுமையான விசாரணைக்கு பிறகே எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தார்களா அல்லது சட்டவிரோத செயல் உள்ளிட்ட வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து தெரிய வரும் என கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.--------