நான்காம் நாள் விழாவில் உப்பூர் விநாயகர் ஊர்வலம்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலையில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது.நான்காம் நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட உற்ஸவர் மயில் வாகனத்தில் வீதி உலா வந்தார். வீதி உலா வந்த விநாயகரை தெருக்களில் பெண்கள் கோலமிட்டு வரவேற்றனர். முன்னதாக மூலவர் மற்றும் உற்ஸவருக்கு நடந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.