உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 100 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது

100 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது

திருவாடானை : திருவாடானை அருகே 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கன மழையால் வேரோடு சாய்ந்தது. திருவாடானை அருகே கருமொழி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த ஆலமரத்தில் ஏராளமான பறவைகள் கூடு கட்டி பல ஆண்டுகளாக தங்கியிருந்தன. திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த இந்த மரம் நேற்று காலை வீசிய பலத்த காற்றில் வேரோடு சாய்ந்தது. திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிகம் சென்றன. ஆலமரம் ரோட்டில் சாயாமல் அருகிலுள்ள கண்மாய்க்குள் சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை