மேலும் செய்திகள்
இந்திய மீனவர்கள் 10 பேர் வவுனியா சிறையிலடைப்பு
04-Feb-2025
ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும் கைது செய்து இரு படகுகளையும் இலங்கை கடற்படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.ராமேஸ்வரத்தில் இருந்து பிப்., 8ல் சென்ற மீனவர்கள், வழக்கம்போல் இந்திய- ----,-------------இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பீதியடைந்த அவர்கள் படகுடன் ராமேஸ்வரம் கரைக்கு திரும்பிய போது, இரு படகை இலங்கை வீரர்கள் மடக்கி பிடித்தனர்.அதில் இருந்த மீனவர்கள் ஜான்போஸ் 39, அந்தோணி இஸ்ரோஸ் 20, நிலாகரன் 44, சேசுபூங்காவனம் 42, அந்தோணிசந்தியா19, கார்லோஸ் 21, நிஷாந்த் 38, டூவிஸ்டன் 21, அய்யாவு 48, அந்தோணி டிமக் 34, அருளானந்தம் 43, ஜெலஸ்டின் 55, அந்தோணி ஆரோன்38 மற்றும் 16வயது சிறுவன்ஆகியோரை கைது செய்து மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் போலீசார் அடைத்தனர்.
04-Feb-2025