உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை சிறையில் விடுவிக்கப்பட்ட 21 மீனவர்கள் ராமேஸ்வரம் வந்தனர்

இலங்கை சிறையில் விடுவிக்கப்பட்ட 21 மீனவர்கள் ராமேஸ்வரம் வந்தனர்

ராமேஸ்வரம் : இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 20 மீனவர்கள் உள்ளிட்ட 21 பேர் விமானம் மூலம் சென்னை வந்து நேற்று இரவு ராமேஸ்வரம் வந்தனர்.நவ., 9 ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் 3 விசைப்படகுகளை சிறை பிடித்து அதிலிருந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இவர்களில் படகு டிரைவர்கள் மூவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், மீதமுள்ள 20 மீனவர்களை விடுவித்தும் யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்டவர்கள் கொழும்பு மெரிகானா முகாமில் தங்கி இருந்தனர்.இவர்கள் மற்றும் ஜூன் 23ல் கைதாகி ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட படகு டிரைவர் காளீஸ்வரன் 40, ஆகியோர் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவிடம் மன்னிப்பு கோரி மனு அளித்தனர். அதன்படி நவ., 6 அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நேற்று கொழும்பில் இருந்து 21 மீனவர்களும் விமானம் முலம் சென்னை வந்தனர். பின் வேன் மூலம் நேற்று இரவு ராமேஸ்வரம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை