திருவாடானை தாலுகாவில் 21,540 எக்டேர் பயிர் காப்பீடு
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் 21 ஆயிரத்து 540 எக்டேர் விவசாய நிலங்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்யப்பட்டுள்ளது.திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டரில் சாகுபடி பணிகள் துவங்கியது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாக அறிவிக்கபட்டது. விவசாயிகள் ஆதார் அட்டை, கணினி சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவைகளை தயார் செய்து பதிவு செய்தனர். நேற்று முன்தினம் காப்பீடு தேதி முடிவடைந்தது. இதில் திருவாடானை தாலுகாவில் 24 ஆயிரத்து 350 விவசாயிகள் 21 ஆயிரத்து 540 எக்டேர் விவசாய நிலங்களை பதிவு செய்துள்ளனர்.