உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 12 நாட்களாக ஆதார் சேவை முடக்கம்

12 நாட்களாக ஆதார் சேவை முடக்கம்

திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் சேவை மையம் உள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் இயங்கும் இந்த இ-சேவை மையத்தில் தினமும் நிறைய பேர் சென்று பெயர், பிறந்த தேதி, அலைபேசி எண், பெற்றோர் பெயரில் திருத்தம், முகவரி மாற்றங்கள், பல்வேறு திருத்தம் தொடர்பாக வந்து செல்கின்றனர்.தொழில் நுட்பக் கோளாறு காரணமாக நேற்றுடன் 12வது நாளாக முடங்கியுள்ளது. திருவாடானையிலிருந்து நீண்ட தொலைவில் உள்ள எஸ்.பி.பட்டினம், தொண்டி, மங்களக்குடி, முள்ளிமுனை, காரங்காடு பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை