உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் விவசாய வணிக கருத்தரங்கம்

கமுதியில் விவசாய வணிக கருத்தரங்கம்

கமுதி: கமுதி கண்ணார்பட்டியில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாய வணிகம் குறித்து கருத்தரங்கம் நடந்தது. கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) வேல்முருகன் தலைமை வகித்தார். கூட்டுறவு சார்பதிவாளர் சண்முகப்பிரியா, நிர்வாக இயக்குனர் பிரீத்தி முன்னிலை வகித்தனர். பொது மேலாளர் போஸ் வரவேற்றார். அப்போது விவசாயி களிடம் இருந்து கிடைக்கும் விளை பொருட் களான நெல், மிளகாய், மல்லி, கம்பு, சோளம், பருத்தியை அதிக விலையில் விற்பனை செய்வது, விலை கிடைக்காத நேரத்தில் சேமித்து வைப்பது, விளை பொருட்களின் மீது கடன் பெறுவது குறித்து விளக்கப்பட்டது. மேலும் உபகரணம் வசதி ஏற்படுத்தி தருவதும், விவசாயிகளிடமிருந்து விளைபொருட்கள் மொத்தமாக கொள்முதல் செய்வது, வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு விற்பனை வசதி ஏற்படுத்துவது குறித்தும் விளக்கினர். கமுதி பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை