உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நுாபுர கங்கை தீர்த்தத்தில் பரமக்குடி அழகருக்கு அபிஷேகம் தைலக்காப்பு விழா கோலாகலம்

நுாபுர கங்கை தீர்த்தத்தில் பரமக்குடி அழகருக்கு அபிஷேகம் தைலக்காப்பு விழா கோலாகலம்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் உற்ஸவர் அழகருக்கு, மதுரை நுாபுர கங்கை தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, தைலக்காப்பு விழாவில் அபிஷேகம் நடத்தப்பட்டது.மதுரை திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோயிலில் நடக்கும் அனைத்து உற்ஸவங்களும், பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கிறது. இதன்படி தைலக்காப்பு விழா துவங்கிய நிலையில் நேற்று முன்தினம் இரவு பெருமாள் கொண்டையில் சந்தனாதி திரவியங்களால் சிகையில் தேய்த்து அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை பட்டு உடுத்தி அலங்கரிக்கப்பட்டார். தீர்த்தவாரி மண்டபத்தில் மதுரை அழகர் கோயில் நுாபுர கங்கை நீர் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தம் வழங்கப்பட்டது. அழகர் ஏகாந்த சேவையில் அருள் பாலித்த நிலையில் மகா தீபாராதனைகள் நடந்தது. இன்று கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி