விழிப்புணர்வு ஊர்வலம்
தொண்டி : தொண்டி பேரூராட்சி சார்பில் துாய்மை பணியாளர்கள் பங்கேற்ற துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பஸ்ஸ்டாண்ட் வரை நடந்தது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு துவக்கி வைத்தார். செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துாய்மை பணிகள் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.