உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கு ஒத்திவைப்பு

 பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் வழக்கு ஒத்திவைப்பு

ராமநாதபுரம்: ராணுவ ரகசியங்களை திருட உதவியாக இருந்த இலங்கையை சேர்ந்தவர்கள் மீதான வழக்கு டிச.,15-க்கு ஒத்திவைக்கப் பட்டது. உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் சித்தி சுலைஹா 52, இவரது அக்கா கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல்ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஓட்டலில் வேலை பார்த்த இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது யாசீர் 40, மனைவி பாரிகா ரிஸ்மியா 35 ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதர வாக இருந்துள்ளனர். இவர்கள் சித்தி சுலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கி ஆதார் கார்டு, சிம்கார்டு களை பெற்றுள்ளனர். பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவியிடம் முகமது யாசீர் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளார். ராணுவ அதிகாரிகளின் அலைபேசிகளை ஹேக் செய்து தகவல்களை அழித்துள்ளனர். கியூ பிரிவு போலீசார் 2021 ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்தி சுலைஹா, முகமது மிப்லால் மவுலவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ராமநாத புரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்குரைஞர் கார்த்தி கேயன் ஆஜரானார். வழக்கை முதலில் விசாரித்த விசாரணை அதிகாரியின் சாட்சியை பதிவு செய்ய அவகாசம் கோரி அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை டிச.,15க்கு ஒத்திவைக்கப் பட்டது. அன்றைய தினம் விசாரணை அதிகாரி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி