காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது
கமுதி: கமுதி - முதுகுளத்துார் ரோடு பாக்குவெட்டி அருகே ரோட்டோரத்தில் காவிரி குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து ரோட்டோரத்தில் குழாய் அமைக்கப்பட்டு கருங்குளம், பேரையூர், பாக்குவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுகுளத்துார் கமுதி ரோடு பாக்குவெட்டி அருகே ரோட்டோரத்தில் கடந்த சில நாட்களாகவே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகிறது. குடிநீர் எந்த பயன்பாடின்றி தேங்குகிறது. பேரையூரில் இருந்து கமுதி செல்லும் ரோட்டில் பல இடங்களில் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவது தொடர்கிறது.இதனால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.