கொடி ஏற்றாத மத்திய அரசு அலுவலகங்கள்
திருவாடானை: நாடு முழுவதும் சுதந்திர தினம் நாட்டுப்பற்றுடன் கொண்டாடபட்டாலும் பெரும்பாலான மத்திய அரசு அலுவலகங்களில் ஆண்டு தோறும் கொடியேற்றபடாமல் உள்ளது. இந்த ஆண்டாவது கொடியேற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால் நேற்று சுதந்திரதினவிழாவை முன்னிட்டு திருவாடானையில் ஸ்டேட் பாங்க், தபால் அலுவலகம், கருவூல அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் கொடியேற்றவில்லை.