உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு...

சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு...

குண்டும் குழியுமான ரோடு ராமநாதபுரம் குண்டுக்கரை காந்தாரியம்மன் கோயில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வழியாக கோயிலுக்கு சென்று வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - மாரியம்மாள், ராமநாதபுரம். குளமாகும் ரோடு ராமநாதபுரம் - மதுரை ரோடு சர்ச் பஸ் ஸ்டாப் அருகே மழைநீர் செல்ல போதிய வடிகால் வசதியின்றி தண்ணீர் தேங்குவதால் நடந்து செல்ல வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். தடையின்றி தண்ணீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கண்ணாயிரம், பேராவூர். சுற்றுச்சூழல் கேடு ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கீழக்கரை செல்லும் மெயின் ரோட்டில் குப்பை கொட்டி எரிப்பதால் புகை பரவி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பை கொட்டுவதை தடுத்து எரிப்பவர்கள் மீது ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - இஸ்மாயில், கீழக்கரை. தெருநாய்கள் தொல்லை பட்டணம்காத்தான் மகாத்மாகாந்தி நகர் மெயின் ரோட்டில் திரியும் நாய்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அவற்றை பிடித்து தடுப்பூசி போட வேண்டும். நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். - நந்தினி, பட்டணம்காத்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ