உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி அரசு கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்

பரமக்குடி அரசு கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்

பரமக்குடி : பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்குகிறது. முதல்வர் ராஜா கூறியதாவது:தமிழகம் முழுவதும் 183 அரசு கல்லுாரிகளில் இளநிலை பாடத்திற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. பரமக்குடியில் ஜூன் 3ல் சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. ஜூன் 4 முதல் அறிவியல் பாடங்கள், வணிகவியல், நிர்வாக மேலாண்மை, வரலாறு, பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது.ஜூன் 6-ல் தமிழ், ஆங்கிலம் பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில் இன்று (ஜூன் 11) இரண்டாம் கட்ட கலந்தாய்வும், ஜூன் 13ல் மூன்றாம் கட்ட கலந்தாய்வும் நடக்கிறது. ஆகவே மாணவர்கள் கலந்தாய்வில் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி