ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர் கூட்டம்
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று விடுமுறை நாளால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் ராமேஸ்வரம் வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பிறகு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த பூஜையில் பங்கேற்றனர். அதிக வாகனங்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் நிலவியது.