ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: நீலவேந்தன் நினைவு நாளை முன்னிட்டு ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டை அமல் படுத்த வலியுறுத்தினர்.